முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

முன்னாள் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பாளரை எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 28ம் திகதியன்று பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பாளர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.