பரீட்சை பணிகளுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கை…

வாழ்க்கை செலவு மற்றும் தொழில்முறை முக்கியத்துத்தையும் கருத்தில் கொண்டு, பரீட்சை பணிகளுக்காக வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம், பரீட்சைகள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இதனுடன், கடந்த ஆகஸ்ட மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையின் வினாத்தாள் திருத்தப்பணிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.