களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர் விநியோகத் தடை …

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 27ம் திகதி களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 15 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, களுத்துறை, வாத்துவ, அளுத்கம, பயாகலை ஆகிய பகுதிகளில் குறித்த தினத்தில் காலை 8.30 மணி முதல் 15 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.