புளோரிடாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு கடை வீதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக மியாமி டேட் கவுண்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.