தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதி திறக்கப்பட்டுள்ளது…

இன்று(24) காலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதி தற்போது திறக்கப்பட்டுள்ளது.

வட்டகொடை மெதகும்புர பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வீதியில் ஏற்பட்ட மண்சரிவினை வீதி அதிகார சபையினரும், பூண்டுலோயா பொலிசாரும் இணைந்து அகற்றியமையை அடுத்து, அந்த வீதியினூடான ஒருவழி போக்குவரத்து, இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.