ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம், நாளை(26) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லகஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
இதன்போது, சமகால அரசியல் நிலைவரம் மற்றும் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளல் என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.