பாணந்துறை நகரில் அமைந்துள்ள நான்கு விற்பனை நிலையங்களில் நேற்றிரவு(25) திடீரென தீப்பற்றியுள்ளதாக பாணந்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவல் காரணமாக கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்றும், ஒரு ஆடை விற்பனை நிலையமும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையென்றும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.