பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – பாராளுமன்ற அமர்வை புறக்கணித்த ஆளும் கட்சி

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(27) பிற்பகல் 1 மணியளவில் கூடியது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.