புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய(28) வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு சமர்பிக்கப்படும் வரை, எதிர்வரும் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக மொத்த செலவினமாக 1735 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டு இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.