கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர் சிலர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றமானது மதிய போசனத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட போது, பாதுகாப்பு பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன நீதிமன்றிலிருந்து வெளியேறும் போது புகைப்படமோ, வீடியோவோ எடுக்க நீதிமன்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாதுகாவலர்கள் தெரிவித்திருந்த நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வர்ந்துள்ளது.