ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரின் பெயர் மற்றும் இலக்கத்துடன் ஒரு தொகை தேர்தல் சுவரொட்டிகளை போலியான இராணுவ இலக்கத்தை கொண்ட கெப்ரக வாகனத்தில் எடுத்துசென்ற இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
கெப்பத்திகொல்லாவ எட்டபகஸ்கட என்னுமிடத்தில் வைத்தே இவ்விருவரும் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதி, கஹட்டகஸ்திகிலியவை வசிப்பிடமாக கொண்டவர் என்றும் உதவியாளர் மதவாச்சியை வசிப்பிடமாக கொண்டவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(riz)