அட்மிரல் ரவீந்திர,துமிந்த சில்வா மற்றும் ஞானசார தேரரை மஹிந்த வெலிக்கடயில் சந்திப்பு…

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ நேற்று(09), அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அவரைப் பார்வையிட்டமையினை மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் றொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமர், தண்டனைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோரையும் சந்தித்துள்ளார் என்றும் றொகன் வெலிவிட்ட கூறியுள்ளார்.