அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஜனவரி 04ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(04) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.