உணவு பரிமாறுகையில் கையால் தொட்டால் கடும் நடவடிக்கை…

கையுறை அல்லது உரிய உபகரணங்களை உபயோகித்து, உணவு பரிமாறல் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அதிக கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று(10) ஆரம்பமாகும் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாடு பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஜே.கே.ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

‘‘உணவுகளை பாதுகாப்பாக கையாளுவோம் – கையுறை அல்லது தகுதியான உபகரணங்களை உபயோகிப்போம்’’ எனும் தொனியின் கீழ் இம்முறை தேசிய உணவு பாதுகாப்பு வாரம் எதிர்வரும் 16ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.