ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என தாம் நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“பாராளுமன்றம், நீதிமன்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் ஆகியன ஜனநாயகத்தின் அத்தியாவசியமான அம்சங்கள் ஆகும். இவை அனைத்தும் குடிமக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாகும்..” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.