பலுசிஸ்தானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்…

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 6 வீரர்கள் உயிரிழந்தனர் என சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களின் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

வாகனத்தில் இருந்த 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதேபோல் அதேபகுதியில் நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.