கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதிக்கு முன்னர் சபை முதல்வர் பதவியில் இருந்த லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அரச தரப்பு பிரதம கொரடாவாக இருந்த கயந்த கருணாதிலக ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களை மீளவும் குறித்த பதவிகளுக்கு நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுவானது ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இன்று(18) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் குறித்த முன்னணியின் பாராளுமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.