பேரூந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற கை கலப்பில் பேரூந்து சாரதி பலி..

தனியார் பேரூந்து சாரதி ஒருவர்(49) வெலிமட பேரூந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற கை கலப்பில் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் ஊழியர்கள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.