ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளையும் வழங்க கூடாது என்ற முடிவில் ஜனாதிபதி தம்மை புறக்கணித்ததாக இன்றைய தினம்(21) சரத் பொன்சேகா உச்ச நீதிமன்றில் குறித்த மனுவினை தாக்கல் செய்யவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.