எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பான தீர்மானம் மிக விரைவில்…

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பான தீர்மானத்தை மிக விரைவில் அறியத் தருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது கருத்துக்களை பலரும் எழுத்து மூலம் முன்வைத்துள்ளனர். இது குறித்து ஆராய்ந்த பின்னரே தீர்மானத்தை அறிவிக்கவுள்ளேன். இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு விசேட தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு அரசியல் கட்சிகள் கேட்டுள்ளனர் எனவும் சபாநாயகர் மேலும் அறிவித்துள்ளார்.