கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் இன்று(23) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று ஆரம்பமாகவுள்ள முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள், எதிர்வரும் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
108 மத்திய நிலையங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜீத்த தெரிவித்துள்ளார்.