சுற்றுலா பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு…

குஜராத்தில் மகால்-பரிதாபாத் சாலையில் அகவா நகரில் சென்ற சுற்றுலா பேரூந்து கவிழ்ந்த விபத்தில், 8 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாணவர்கள் உட்பட 80 பேர் சுற்றுலா சென்ற பேரூந்து மகால்-பரிதாபாத் சாலையில் அகவா நகரில் சென்றபோது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் படுகாயம் அடைந்த 24 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. .