அரசியல் கட்சிகளிடம் மஹிந்த கோரிக்கை…

மாகாண சபை தேர்தல்களை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்களை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்திருந்தார்.

அரசியல் கட்சிகள், விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தலை நடாத்துவதற்காக மாகாண சபை தேர்தல் சட்டத்தினை அரசியல் கட்சிகள் மாற்ற வேண்டும்.

இதனை மாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற வேண்டும் என்றார்.