வட மாகாணத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலதிகமாக சீருடைகள் மற்றும் பாதனிகளை பெற்றுக்கொள்ளும் வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், பாடப்புத்தகங்கள் சேதமடைந்திருந்தால் அதற்கு பதிலாக புதிய புத்தகங்களை வழங்குவதற்கும் கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.