பிரதமர் இன்று(28) கிளிநொச்சிக்கு விஜயம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(28) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை நேரில் கண்டறிவது விஜயத்தின் நோக்கமாகும்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர் ஆராயவுள்ளதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பிரதமர் நிலைமையை நேரில் கண்டறியவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.