பேருவளையில் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்..

பேருவளை – பலபிடிய கடற் பிரதேசத்தில் 2,778 பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயின் போதைபொருள், 231 கிலோ கிராத்துடன் கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று(03) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்த முன் பிரச்சன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.