ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்றிரவு(03) இடம்பெற்ற கட்சி மத்தியக் குழு கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.