அங்கே ‘அம்மா’, இங்கே ‘அப்பச்சி’ : காலில் விழுந்து கரை சேர்ந்த முன்னாள் அமைச்சர்

காலில் விழுந்து வணங்கும் அரசியல் கலாசாரத்தை இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடையே அதிகமாகக் காணமுடியும்.

அப்பழக்கத்தை இலங்கையிலும் தற்போது அதிகமாக காணக்கிடைக்கின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என அழைக்கும் தொண்டர்களைப் போல , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவை ‘தந்தை’ அதாவது அப்பச்சி என அழைக்கின்றனர்.

நிலமை இவ்வாறு இருக்க அண்மையில் மைத்திரி- ரணில் அரசின் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய ஜனக பண்டார தென்னகோன் , மேடையில் வைத்து மஹிந்தவின் காலில் விழுந்து வணங்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது