03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று(07) நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க.
ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை , கடந்த வௌ்ளிக்கிழமை மேல் , மத்திய , வடமத்திய , வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான 5 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.