2019ம் ஆண்டு இலங்கை 2200 பில்லியன் ரூபாயை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனுக்காக இந்த வருடம் குறித்த தொகை செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கங்களிடம் பெற்றுக் கொண்ட கடன் , திறைசேறி பற்றுச்சீட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகளின் கீழ் குறித்த கடன் தொகைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைப் பெற்றுக் கொண்டுள்ள கடனுக்காக தவணை முறையில் 1300 பில்லியன் ரூபாயையும் அதற்கான வட்டியாக 900 பில்லியன் ரூபாயையும் செலுத்த வேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.