வாகனங்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ‘இலத்திரனியல் மோட்டார்’ முறையின் கீழ் முன்னெடுத்து செல்லும் நடவடிக்கையின் இறுதி கட்டமானது தற்போது இடம்பெற்றுவருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்திருந்தார்.
இதில் வாகன பதிவு முதல் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்.