நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 3 பேர் ஹெரோயினுடன் கைது

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 3 பேர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கிஸ்ஸ – சட்டிகல மாவத்தை பிரதேசத்தில் நேற்று 205 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று(11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை , பொரளை – வெலிகட சிறைச்சாலைக்கு அருகில் 24 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மட்டக்குளி – கதிரான தோட்டம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 55 வயதுடைய சந்தேகநபரொருவர் 10 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.