வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்…

காலி பெட்டிகல பிரதேசத்தில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

காலி தீயணைப்பு பிரிவு மற்றும் தெற்கு கடற்படை முகாம் அதிகாரிகளின் உதவியுடன் குறித்த தீ கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.