2018ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு…

2018ம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் நேற்று (11) முதல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.