ஜனாதிபதி தேர்தலுக்கு தானும் தயார் என முன்னாள் சபாநாயகரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு நானும் பொருத்தமானவர் எனவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தயார் என்றால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.