ஜனாதிபதி பொது வேட்பாளராக அண்ணன் – தம்பி மோதல்..

ஜனாதிபதி தேர்தலுக்கு தானும் தயார் என முன்னாள் சபாநாயகரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு நானும் பொருத்தமானவர் எனவும், ஜனாதிபதி​ தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரா​கவே இருக்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தயார் என்றால், ஜனாதிபதி ​தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.