டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்த வழக்கினை தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.
++++++++++++++++++++++++++++++ UPDATE
கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில்…
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.