நூல் நிலையமொன்றில் தீப்பரவல்…

வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள நூல் நிலையமொன்றில் நேற்றிரவு(17) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயினை பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து அணைத்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.