அவுஸ்திரேலியா உடனான எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியானது முதலில் சிறந்த ஆரம்பத்தினை பெற்று அதிக ஓட்டங்களை பெற்றுக் கொள்வது அவசியம் எனவும், அவ்வாறு பாரிய இலக்கொன்றினை பெற்று எதிரணிக்கு சவால்மிக்க ஆரம்பம் ஒன்றினை வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளரான மாவன் அதபத்து தெரிவித்திருந்தார்.
அவ்வாறே, இந்தியாவின் சந்திப்பில் அவுஸ்திரேலிய அணியானது தோல்வி கண்டதானது, இலங்கை அணிக்கு அதிக வாய்ப்புக்களை பெற்றுத் தரும் போட்டியாக இது அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.