உயர் தரப் பரீட்சைக்கான கடமைகள் மற்றும் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் இது வரையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வழங்கல்களை விரைவில் வழங்காதவிடத்து அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயார் எனவும் குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.