ஞானசார தேரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்..

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக புத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த உள்ளிட்டவர்கள் வெவ்வேறாக ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி இந்தக் கோரிக்கைகளை தயவுடன் நோக்கி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

இன்னும்,தேரரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.