இலங்கை சுங்கப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக சுங்கத் திணைக்களத்திற்கு கிடைக்கவேண்டிய வருமானம், நூற்றுக்கு 65 சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சுங்கப் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(02) 4 வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சுங்க திணைக்களத்திற்கு சுமார் 3 பில்லியன் ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக கடமையாற்றி, பீ.எஸ்.எம். சார்ள்ஸை அந்தப் பதவியிலிரு நீக்கி, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை நியமித்த நடவடிக்கைக்கு சுங்கத் திணைக்கள பணியாளர்கள் கடந்த 29 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.