செல்லப்பிராணியான நாய்களை குளிப்பாட்டிய பின்னர், ஈரத்தன்மையை உலர்த்துவதற்கு வித்தியாசமான சாதனம் ஒன்று சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
பல்வேறு நிறுவனங்களும் செல்லப்பிராணிகளுக்கான பல சாதனங்களை உருவாக்கி வருகின்றன.
அந்த வகையில், பஃப் என் ஃப்ளப் நிறுவனம், நாய்களுக்கான வினோதமான சாதனத்தை அறிமுகப்படுத்தி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
நாய்கள் வளர்ப்பில் முக்கிய சிரமமாக கருதப்படுவது அவற்றை குளிப்பட்டுவதுதான். நாய்கள் தெருக்களில் சேறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பின்பு அவற்றை குளிப்பாட்டியபின் உலர வைப்பதற்காக, வித்தியாசமான டிரையர் ஒன்றை, பஃப் என் ஃப்ளப் வடிவமைத்து சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
நாயின் முடிகளுக்கேற்றவாறு டிரையரின் வெப்பத்தை அட்ஜஸ்ட் செய்து, 5 முதல் 10 நிமிடங்கள் வரை உலர வைத்தால், இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் இதனை வாங்க பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.