ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி சம்பவம் தொடர்பில் விசாரணை…

ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மது போதையுடன் ஊழியர்கள் சிலர் கலந்துகொண்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட குழுவினால் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.