தனி ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாத நிலையில், அரசியல் யாப்பின் மீதான 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசிய அரசுகளை நியமிக்கலாம் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.
தேசிய அரசாங்கம் தொடர்பிலான பிரேரணை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த யோசனை சட்டபூர்வமானது அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.