பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர், இன்று காலை, பாராளுமன்றத்திலுள்ள மின்தூக்கியில் (லிஃப்ட்) சிக்குண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலத்திரனியல் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தச் சிக்கல், சுமார் 15 நிமிடங்களுக்குப் பின் சரி செய்யப்பட்டதன் பின்னரே, குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மின்தூக்கியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மின்தூக்கியில் தாம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சில நிமிடங்கள் சிக்குண்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.