பாரிய கொழும்பின் கழிவு நீர் சுத்திகரிப்பு வேலை திட்டத்தின் கீழ் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 01, 13, 14, 15 மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை(09) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை(09) இரவு 09 மணி முதல் ஞாயிறு பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.