ஆர்ப்பாட்டம் காரணமாக, தம்புள்ளை, பனாம்பிட்டிய பிரதேசத்தில் ஏ9 வீதியினூடான போக்குவரத்து தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் ஐந்தாம் தர மாணவர்களுக்காக கற்பிக்க ஆசிரியர் ஒருவர் இல்லாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களும் பெற்றோர்களும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.