மகள் வரவேற்பு விழாவில் வித்தியாசமான பரிசை கொடுத்து விருந்தினர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ரஜினி…(PHOTOS)

பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவின் திருமண அன்பளிப்பாக வித்தியாசமான பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

செளந்தர்யாவின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

கிராபிக் டிசைனர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவருக்கு நாளை(10) திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகரும் தொழிலதிபருமான விசாகனைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் செளந்தர்யா.

இதற்காக திருநாவுக்கரசர், கமல்ஹாசன், இளையராஜா என நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பிதழ் வைத்தார் ரஜினிகாந்த்.

நேற்று(08) செளந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பு, கோடம்பாக்கத்தில் உள்ள நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.

இந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு, விதைப்பந்தை அன்பளிப்பாக அளித்துள்ளனர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதாவும்.

அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பதுதான் வழக்கம். இன்னும் சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர்.

ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார்.

Image result for soundarya wedding gift

Image result for soundarya wedding

Image result for soundarya wedding

 திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விதைகள் அடங்கிய பை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அன்பளிப்பு