துப்பாக்கிகளுடன் மூன்று பேர் கைது…

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டும் துப்பாக்கி பாகங்கள் சிலவற்றுடன், மூன்று பேர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

சந்தேகநபர்கள் பெலியத்தை, பாலடுவ மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.