வடக்கு ரயில் சேவைக்கு 08 மாதங்களுக்கு பூட்டு…

வடக்கிற்கான ரயில் சேவையானது மஹவை சந்தியில் இருந்து வவுனியா (ஓமந்த) வரையிலான ரயில் பாதையின் பூரண திருத்தப்பணிகள் காரணமாக 08 மாதங்களுக்கு முழுமையாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

பிரித்தானிய காலத்திற்கு பின்னர் குறித்த ரயில் பாதையில் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.